ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இறக்கத்தில் பங்குச் சந்தை: 3 நாள்களில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிவு

வங்கி மற்றும் ஐடி பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

News image
இறக்கத்தில் பங்குச் சந்தை: 3 நாள்களில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிவு
Updated On :20 ஜனவரி 2022, 11:18 am

DIN

வங்கி மற்றும் ஐடி பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் வீழ்ச்சியால்  தொடர் இறக்கத்தை அடைந்துள்ளது.

நேற்று(ஜன.19) 60,098.82 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 60,045.48 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 634.20 புள்ளிகளை இழந்து 59,464.62 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,938.40 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,921.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 181.40  புள்ளிகள் சரிந்து 17,757.00 புள்ளிகளில் நிலைபெற்றது.

மேலும், சென்செக்ஸ் கடந்த 3 நாள்களில் 1,800 புள்ளிகளை இழந்து வர்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.