கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இன்ஸ்டாகிராம் : காணாமல் போன குழந்தைகளை கண்டறிய புதிய சேவையை தொடங்கியது

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ‘ஆம்பர் அலர்ட்’ எனும் புதிய சேவை ஒன்றினை தொடங்கியுள்ளது. 

News image
படம் : டிவிட்டர், இன்ஸ்டாகிராம் | ஆம்பர் அலர்ட்
Updated On :2 ஜூன் 2022, 11:06 am

DIN

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ எனும் புதிய சேவை ஒன்றினை தொடங்கியுள்ளது. 

தென்னாப்ரிக்கா, தைவான், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிட்ட்டன் உட்பட 25 நாடுகளுக்கு வரும் வாரத்தில் இருந்து இந்த சேவையைப் பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.  

“நாங்கள் முதன்முதலாக ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ சேவையை இன்ஸ்டாகிராமுக்கு கொண்டு வருகிறோம். அமெரிக்காவின் ‘தேசிய காணாமல்போன குழந்தைகள் மையம்’, பிரிட்டனின் ‘தேசிய புலனாய்வு அமைப்பு’, மெக்சிகோவின்  ‘அட்டர்னி ஜெனரல் ஆபிஸ்’ முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து இந்த சேவை  செயல்படும்” என மெட்டா நிறுவனம் தெரிவித்தது.  

2015 முதல் முகநூல் (பேஸ்புக்) ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ சேவையுடன் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவி வருகின்றது.

இந்த சேவையை ஆக்டிவேட் செய்ததும் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் குறிப்பிட்ட தூரத்திற்கு வரை பதிவாகியுள்ள வழக்கு விபரங்கள் உங்களுக்கு டைம்லைனில் தெரியவரும். இதில் அந்த குழந்தைகளின் புகைப்படம், அவர்கள் பற்றின விவரங்கள், தொலைந்துப்போன இடம் மற்றும் இன்னபிற விவரங்களும் அடங்கியிருக்கும். மக்கள் இந்த தகவலை தனது நண்பர்களுக்கு பகிர முடியும். இதன் மூலம் குழந்தைகள் கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்ட பெற்றோர்களுடன் ஒப்படைக்க முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.