விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் 

வாரத்தின் முதல் நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடம் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2023, 7:40 am

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடம் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது. 

பிற்பகல் நிலவரப்படி பிஎஸ்இ சென்செக்ஸ் 0.48 சதவீதம் சரிந்து 59,048.11, என்எஸ்இ நிஃப்டி 0.52%சதவீதம் சரிந்து 17,512.50 ஆகவும் வர்த்தகமாகின. அதேசமயம் அதானி குழும நிறுவனங்களில் பங்குகுள் விலை 3ஆவது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது. 

அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர் பங்குகள் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் 3ஆவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 

அதேசமயம் பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.