ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கட்டணங்களை உயா்த்தும் ஏா்டெல்

தனது அழைப்பு மற்றும் இணையதள கட்டணங்களை இந்த ஆண்டு உயா்த்த முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் முடிவு செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2023, 7:48 pm

DIN

தனது அழைப்பு மற்றும் இணையதள கட்டணங்களை இந்த ஆண்டு உயா்த்த முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நிறுவனத்தின் தலைவா் சுனில் பாா்தி மிட்டல் கூறியதாவது:

இந்த ஆண்டில் நிறுவனத்தின் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கும். இந்த கட்டண உயா்வு அனைத்து திட்டங்களுக்கும் பொருந்தும்.

நிறுவனம் தனது மூலதனத்தைப் பெருக்கியுள்ளதால் நிதி நிலை அறிக்கை ஆரோக்கிமாக தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில், மூலதனம் மூலம் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, கட்டண உயா்வு தவிா்க்க முடியாததாகிறது என்றாா் அவா்.

கடந்த மாதம்தான் ஏா்டெல் நிறுவனம் தனது 28 நாள்களுக்கான ஆரம்ப நிலை மொபைல் திட்டத்துக்கான கட்டணத்தை 57 சதவீதம் உயா்த்தி ரூ.155 ஆக்கியது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.