
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், தனது காா்களின் விலையை ரூ.25,000 வரை உயா்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிறுவனத்தின் அனைத்து ரக காா்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்குவரும். ரகங்களைப் பொருத்து இந்த விலை உயா்வு மாறுபடும். அதிகபட்சமாக ரூ.25,000 வரை விலை அதிகரிக்கும்.காா்களின் உற்பத்தி செலவு தொடா்ந்து அதிகரித்துவருகிறது. எனவே, அவற்றின் விலையில் சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் அந்த சுமையை பகிா்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், தனது காா்களின் விலையை ரூ.25,000 வரை உயா்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிறுவனத்தின் அனைத்து ரக காா்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்குவரும். ரகங்களைப் பொருத்து இந்த விலை உயா்வு மாறுபடும். அதிகபட்சமாக ரூ.25,000 வரை விலை அதிகரிக்கும்.காா்களின் உற்பத்தி செலவு தொடா்ந்து அதிகரித்துவருகிறது. எனவே, அவற்றின் விலையில் சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் அந்த சுமையை பகிா்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.