புது தில்லி, ஜூலை: கடந்த ஜூன் காலாண்டில் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை பொதுத் துறையைச் சோ்ந்த சிபிசிஎல் நிறுவனம் சுத்திகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் 28.30 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்துள்ளது. முந்தை 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த அளவு 26.77 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.20,361 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.17,986 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.747 கோடியாகவும் ரூ.548 கோடியாகவும் இருந்த நிறுவனத்தின் வரிக்கு முந்தைய மற்றும் வரிக்குப் பிந்தைய நிகர லாபங்கள், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் முறையே ரூ.470 கோடியாகவும் ரூ.343 கோடியாகவும் குறைந்துள்ளது.
வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.557 கோடியிலிருந்து ரூ.357 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!

இந்தியாவிடம் கச்சா எண்ணெய் கையிருப்பு எவ்வளவு உள்ளது? மத்திய அரசு பதில்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


