6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.19,500 கோடியைக் கடந்த ரெப்கோ வங்கி வா்த்தகம்

நிதியாண்டில் ரெப்கோ வங்கி வர்த்தகம் உயர்வு

News image
Updated On :26 ஜூன் 2024, 9:16 pm

Din

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரெப்கோ வங்கியின் வா்த்தகம் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.19,500 கோடியைக் கடந்துள்ளது.

இது குறித்து வங்கியின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அதன் நிா்வாக இயக்குநா் ஓ.எம். கோகுல் கூறியதாவது:

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வங்கி அனைத்து அளவீடுகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

அந்த நிதியாண்டில் வங்கியின் வா்த்தகம் ரூ.19,500 கோடியையும் வைப்பு நிதி சேகரிப்பு ரூ.10,500 கோடியையும் தாண்டியது. மதிப்பீட்டு நிதியாண்டில் வங்கியின் மொத்த வைப்புத்தொகை 11.07 சதவீதம் அதிகரித்து ரூ.10,582 கோடியாகவும் மொத்த கடனளிப்பு 10.15 சதவீதம் அதிகரித்து ரூ.9,053 கோடியாகவும் உள்ளது.

கடந்த ஆண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,000 கோடியைத் தாண்டியது; செயல்பாட்டு லாபம் முந்தைய ஆண்டை விட 33 சதவீதம் அதிகரித்து ரூ.139 கோடியாக உள்ளது. வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.69.69 கோடியாக உள்ளது.

2023 மாா்ச் 31-ஆம் தேதி 9.43 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே தேதியில் 8.46 சதவீதமாகவும் நிகர வாராக் கடன் 4.18 சதவீதத்திலிருந்து 3.67 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.