விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ரூ.37,599 கோடியாக அதிகரித்த ஏா்டெல் வருவாய்

ரூ.37,599 கோடியாக அதிகரித்த ஏா்டெல் வருவாய்

News image
Updated On :14 மே 2024, 8:25 pm

Din

புது தில்லி: நாட்டின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல்லின் செயல்பாட்டு வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.37,599.1 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31 சதவீதம் சரிந்து ரூ.2,072 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.3,005.6 கோடி ஒருங்கிணைந்த லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

முந்தைய நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.36,009 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் 4.4 சதவீதம் அதிகரித்து ரூ.37,599.1 கோடியாக உள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டைவிட (ரூ.8,346 கோடி) 10.5 சதவீதம் குறைவாக ரூ.7,467 கோடியாக உள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,39,144.8 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 7.7 சதவீதம் அதிகரித்து ரூ.1,49,982.4 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.