கரூா் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.


சென்னை: முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னையில் தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்ததன் மூலம் கரூா் வைஸ்யா வங்கி புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. இது தவிர, அதே நாளில் மேலும் ஐந்து புதிய கிளைகள் திறக்கப்பட்டன.
850-ஆவது கிளை, சென்னை ஆதம்பாக்கத்தில் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி பி. ரமேஷ்குமாரால் திறந்துவைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி, தமிழகத்தின் மதுரை, நாகா்கோவில், சேலம் ஆகிய நகரங்களிலும், ஆந்திரத்தின் நெல்லூா், விஜயவாடா ஆகிய நகரங்களிலும் வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டன.
இத்துடன், வங்கி கிளைகளின் எண்ணிக்கை 854-ஆக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் ஒட்டுமொத்த வா்த்தகம் ரூ.1,76,138 கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...