ராஜஸ்தானில் டிரான்ஸ்மிஷன் திட்டத்தை கையகப்படுத்திய பவர் கிரிட்!
புதுதில்லி: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ராஜஸ்தானில் உள்ள மின் தொடரமைப்பு டிரான்ஸ்மிஷன் திட்டத்தை கையகப்படுத்தியுள்ளது என்று இன்று தெரிவித்துள்ளது.
கட்டண அடிப்படையிலான போட்டி ஏலம் மூலம் இந்த திட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பவர் கிரிட் நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி 8% அதிகரிப்பு!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனமானது ராஜஸ்தான் பகுதியிலிருந்து மின்சாரத்தை கடத்துவதற்கு டிரான்ஸ்மிஷன் அமைப்பை நிறுவ பிகானீர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

