டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 2:15 am IST

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த அக்டோபரில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 8.44 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7.4 சதவீதம் அதிகம். அப்போது இந்தியா 7.86 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்திருந்தது.

2023 அக்டோபரில் 1.17 கோடி டன்னாக இருந்த கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி இந்த அக்டோபரில் 1.66 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் நிலக்கரி ஏற்றுமதி 7.92 டன்னிலிருந்து 8.29 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6.1 சதவீதம் அதிகரித்து 53.74 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி 50.66 கோடி டன்னாக இருந்தது.

2023-24-ஆம் நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் 54.15 கோடி டன்னாக இருந்த நிலக்கரி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 57.14 கோடி டன்னாக உயா்ந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.