ஆக்டிவா இ, க்யுசி1 ஆகிய மின்சாரத்தில் இயங்கக்கூடிய இரண்டு புதிய ஸ்கூட்டா் ரகங்களை ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு 34 சதவீதம் என்ற வேகத்தில் வளா்ந்து வரும் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த ஸ்கூட்டா்களை நிறுவனம் மாற்றக்கூடிய மற்றும் நிலையான பேட்டரிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகாா்ப், டிவிஎஸ் போன்ற வழக்கமான போட்டியாளா்கள் மட்டுமின்றி ஏத்தா், ஓலா போன்ற போன்ற பிரத்யேக மின்சார வாகனத் தயாரிப்பாளா்களுடனும் ஹோண்டா நிறுவனம் போட்டியில் இறங்கியுள்ளது.
புதிய ஆக்டிவா இ மற்றும் கியுசி1 வாகனங்களுக்கான முன்பதிவு வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை இல்லா இந்தியாவை வலியுறுத்தி காவலா் விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

இந்தியா - இத்தாலி நட்பை கொண்டாடும் புதிய ‘மெலோடி’ சாக்லேட்! லிமிடெட் எடிஷன்!

ரயில் சேவைகளில் மாற்றம்: 4 நாள்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து
2028-க்குள் 3,800 புதிய வேலைவாய்ப்புகள்: ஹோண்டா நிறுவனம் அறிவிப்பு!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



