பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி! 3 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வு!

சென்செக்ஸ் 1,391 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி! 3 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வு!
Published on
Updated on
1 min read

நிதியாண்டின் முதல் நாளான இன்று (ஏப். 1) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 1,391 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பின் எதிரொலி காரணமாக முதலீட்டாளர்களிடையே நிலவிய நிலையற்ற தன்மையால், இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்ததாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

துறைவாரியாக வங்கி மற்றும் ஐடி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் சரிவில் இருந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்து 76,024.51 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.80 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353.65 புள்ளிகள் சரிந்து 23,165.70 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.50 சதவீதம் சரிவாகும்.

3 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்வு

நிதியாண்டின் முதல் வணிக நாளான இன்று சென்செக்ஸ் சரிவுடனேயே தொடங்கியது. 76,882.58 புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 77,487.05 புள்ளிகள் வரை உயர்ந்தது. முதலீட்டாளர்களிடையே நிலவிய நிலையற்ற தன்மையால், பிற்பாதியில் தொடர்ந்து சரிந்து, அதிகபட்சமாக 75,912.18 புள்ளிகள் வரை சரிந்தது.

இறுதியில் வணிக நேர முடிவில் 1,390 புள்ளிகள் சரிந்து 76,024 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன. இதில் அதிகபட்சமாக எச்.சி.எல். டெக், பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்தன.

இந்தஸ்இந்த் வங்கி 5.06%, சொமாட்டோ 0.16%, எஸ்பிஐ 0.03% ஆகிய நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.

நிஃப்டி நிலவரம்

நிஃப்டியைப் பொறுத்தவரையில், 23,341.10 புள்ளிகளுக்குத் தொடங்கிய நிலையில், படிப்படியாக உயர்ந்தது. அதிகபட்சமாக

23,565.15 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் தொடர்ந்து சரிந்து, அதிகபட்சமாக 23,136.40 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 353 புள்ளிகள் சரிந்து 23,165 புள்ளிகளுடன் நிஃப்டி நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் இந்தஸ் இந்த் வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக 5.06% வரை உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக டிரென்ட் 4.73%, பஜாஜ் ஆட்டோ 1.45%, ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் 1.28%, எச்டிஎஃப்சி லைஃப் 1.06%, ஹீரோ மோட்டோகார்ப் 1.06%, அதானி என்டர்பிரைசஸ் 0.84% வரை உயர்ந்திருந்தன.

இதேபோன்று எச்சிஎல் டெக் -3.91%, பாஜாஜ் ஃபின்சர்வ் -3.50%, எச்டிஎஃப்சி வங்கி -3.31%, இன்ஃபோசிஸ் -2.82%, பஜாஜ் ஃபைனான்ஸ் -2.77% சரிவுடன் இருந்தன.

இதையும் படிக்க | கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com