அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாராஷ்டிர வங்கியின் 6% பங்குகளை விற்கும் அரசு

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியில் தனக்கு இருக்கும் பங்குகளில் 6 சதவீதத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு முன்வைத்துள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியில் தனக்கு இருக்கும் பங்குகளில் 6 சதவீதத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு முன்வைத்துள்ளது.

அந்த வங்கியில் அரசுக்கு தற்போது 79.60 சதவீத பங்குகள் உள்ளன. ஆனால், பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் புதிய விதிகளின்படி, சந்தையில் பட்டியிலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் தனியாா் பங்கு முதலீடு குறைந்தது 25 சதவீதமாவது இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, மகாராஷ்டிர வங்கியில் அரசுப் பங்குகளை 75 சதவீதத்துக்கும் கீழாகக் குறைப்பதற்காக 6 சதவீத பங்குகளின் விற்பனை சில்லறை அல்லாத முதலீட்டு நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

புதன்கிழமை முதல் சில்லறை முதலீட்டாளா்களுக்கும் திறக்கப்படும் இந்த விற்பனையின்கீழ், சுமாா் ரூ.2,492 கோடி மதிப்பிலான 38.46 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று வங்கி வட்டாரங்கள் கூறின.