4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயா்வு
நவம்பரில் அமெரிக்க நுகா்வோா் விலைப் பணவீக்கம் எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயா்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயா்வுடன் நிறைவடைந்தன.









