எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆபரணங்கள் 8.5% பங்களிக்கும்: அவினாஷ் குப்தா

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இது 8.5% எட்டும் என்று ஜெம் அண்டு ஜூவல்லரி கவுன்சில் துணைத் தலைவர் தலைவர் அவினாஷ் குப்தா தெரிவித்தார்.

News image
வைரம்
Updated On :23 பிப்ரவரி 2025, 2:37 pm

DIN

புதுதில்லி : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்கம் ஏற்கனவே 7.5% பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இது 8.5% எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ஜெம் அண்டு ஜூவல்லரி கவுன்சில் துணைத் தலைவரான அவினாஷ் குப்தா.

வட இந்தியாவின் நகை வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக தில்லி உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள நகை வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனிடையில் பிரதமரின் விக்ஸித் பாரத் உடன் ஒத்துப்போகும் வகையில், வைரம் மற்றும் தங்க தொழில் செல்வத்தை வளர்க்கும் என்றனர்.

தில்லி ஜுவல்லரி & ஜெம் ஃபேர் சிக்னேச்சரின் முதல் பதிப்பு பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்வில், சுமார் 120 பிரீமியம் கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். 2035ல் இந்த துறையில் 225 முதல் 245 பில்லியன் டாலர் மதிப்பீடு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் முன்னணி பிசினஸ்-டு-பிசினஸ் நிகழ்வு ஏற்பாட்டாளரான இன்ஃபார்மா மார்க்கெட்ஸ், இந்தியாவில் கண்காட்சியாளர்கள் தங்கள் சமீபத்திய வடிவமைப்புகளை வெளியிடவும், பிரீமியம் பிரிவில் பிராண்ட் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும், நகைத் துறையில் முக்கிய பங்குதாரர்களுடன் ஈடுபடவும் ஒரு முக்கிய தளத்தை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தது.

இந்தியாவின் மிகச்சிறந்த நகை கைவினைத்திறனை எடுத்துக்காட்டும் இந்த மூன்று நாள் நிகழ்வானது, சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8,000க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.