மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆபரணங்கள் 8.5% பங்களிக்கும்: அவினாஷ் குப்தா

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இது 8.5% எட்டும் என்று ஜெம் அண்டு ஜூவல்லரி கவுன்சில் துணைத் தலைவர் தலைவர் அவினாஷ் குப்தா தெரிவித்தார்.

News image

வைரம்

Updated On :23 பிப்ரவரி 2025, 9:30 pm IST

புதுதில்லி : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வைரம் மற்றும் தங்கம் ஏற்கனவே 7.5% பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இது 8.5% எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ஜெம் அண்டு ஜூவல்லரி கவுன்சில் துணைத் தலைவரான அவினாஷ் குப்தா.

வட இந்தியாவின் நகை வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக தில்லி உருவெடுத்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள நகை வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனிடையில் பிரதமரின் விக்ஸித் பாரத் உடன் ஒத்துப்போகும் வகையில், வைரம் மற்றும் தங்க தொழில் செல்வத்தை வளர்க்கும் என்றனர்.

தில்லி ஜுவல்லரி & ஜெம் ஃபேர் சிக்னேச்சரின் முதல் பதிப்பு பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்வில், சுமார் 120 பிரீமியம் கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். 2035ல் இந்த துறையில் 225 முதல் 245 பில்லியன் டாலர் மதிப்பீடு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் முன்னணி பிசினஸ்-டு-பிசினஸ் நிகழ்வு ஏற்பாட்டாளரான இன்ஃபார்மா மார்க்கெட்ஸ், இந்தியாவில் கண்காட்சியாளர்கள் தங்கள் சமீபத்திய வடிவமைப்புகளை வெளியிடவும், பிரீமியம் பிரிவில் பிராண்ட் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும், நகைத் துறையில் முக்கிய பங்குதாரர்களுடன் ஈடுபடவும் ஒரு முக்கிய தளத்தை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தது.

இந்தியாவின் மிகச்சிறந்த நகை கைவினைத்திறனை எடுத்துக்காட்டும் இந்த மூன்று நாள் நிகழ்வானது, சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8,000க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.