திமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தை பிறந்துவிட்டது: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்கள்தான்.

News image

தங்கம் விலை நிலவரம்

Updated On :16 ஜனவரி 2025, 10:56 am IST

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது. இந்த நிலையில், தை மாதம் மூன்றாம் தேதியான காணும் பொங்கலன்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.58,720க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று ரூ.59 ஆயிரத்தை எட்டிவிட்டது.

ஜனவரி முதல் வாரத்தில் 57 ஆயிரம் ரூபாயில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து இன்று 59 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது.

அதுபோல, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து ரூ.7,390க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,340க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,056க்கு இன்று விற்பனையாகிறது.

வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை ஏற்ற - இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.2 அதிகரித்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.