அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

எச்சிஎல் முதல் காலாண்டு நிகர லாபம் 9.7% சரிவு!

ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7% சரிவு ஏற்பட்டதாக எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் 3% சரிந்து முடிந்தன.

News image

hcl

Updated On :15 ஜூலை 2025, 11:07 pm IST

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்து முடிந்தன.

பிஎஸ்இ-யில் காலை நேர வர்த்தகத்தில் பங்கின் விலை 4.28 சதவிகிதம் சரிந்து ரூ.1,550.50 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் பங்கின் விலை 3.31 சதவிகிதம் சரிந்து ரூ.1,566.35 ஆக முடிந்தது.

என்எஸ்இ-யில் காலை நேர இன்ட்ராடே வர்த்தகத்தில் 4.30 சதவிகிதம் குறைந்து ரூ.1,550 ஆக இருந்தது. பிறகு 3.25 சதவிகிதம் குறைந்து ரூ.1,567 ஆக முடிந்தது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,843 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் அது ரூ.4,257 கோடியாக இருந்தது.

இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.14,545.24 கோடி குறைந்து ரூ.4,25,054.93 கோடியாக உள்ளது.

Summary

HCL Technologies closed over 3 per cent lower on Tuesday after the company reported a 9.7 per cent drop in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.