பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்!

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி 2025 மாடல் பைக் பற்றி...

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி 2025 - படம்: அப்பாச்சி வலைதளம்

Published On :

இரு சக்கர வாகனத்தில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆர்டிஆர் 200 4வி பைக்கின் 2025ஆம் ஆண்டு வெர்சனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

முந்தைய ஆர்டிஆர் 200 4வி மாடலைவிட சில அப்டேட்களுடன் வெளியாகியுள்ள இந்த மாடலின் ஷோ ரூம் விலை ரூ. 1.54 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

என்ஜினை பொறுத்தவரை முந்தைய மாடலில் இருந்த சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் தொடர்கிறது. ஓபிடி 2பி விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 199 சிசியில் சோதிக்கப்பட்டுள்ளது.

20.8 எச்.பி. பவர் மற்றும் 17.25 என்.எம். டார்க் தொடர்கிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் அர்பன், ஸ்போர்ட், ரெயின் ஆகிய மோட்களில் பைக்கை ஓட்டும் வசதி உள்ளது.

மேட் பிளாக், கிளாஸி பிளாக் மற்றும் கிரானைட் கிரே ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து நிற பைக்கின் சக்கரங்களும் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோஃபார்ம் கைப்பிடி, ரேஸ் பைக்கை போன்று ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜஸ் கிளட்ச், லீவர்கள், டிஜிட்டல் திரைகள், எல்இடி விளக்குகள், புளூடூத் இணைக்கும் வசதிகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.