திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை! ரூ. 3 லட்சம் கோடி லாபம்!!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

News image

கோப்புப்படம் - ANI

Updated On :21 மே 2025, 5:28 pm IST

மூன்று நாள் சரிவுக்குப் பின்னர், பங்குச்சந்தை இன்று(மே 21) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,327.61 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே ஏற்றம் கண்டு வந்தது. காலை 800 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், வர்த்தக நேர முடிவில் 410.20 புள்ளிகள் அதிகரித்து 81,596.63 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இறுதியில் 129.55 புள்ளிகள் உயர்ந்து 24,813.45 புள்ளிகளில் இருந்தபோது வர்த்தகம் நிறைவு பெற்றது.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, பார்மா, ரியால்டி, ஐடி, நிதி துறைகள் உயர்ந்தன.

பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், சன் பார்மா, டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, நெஸ்லே, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பவர் கிரிட், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

கடந்த 3 நாள்கள் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றம் கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.