முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஜிஎன்எஃப்சி நிறுவனத்தின் 4-வது காலாண்டு லாபம் 62% உயர்வு!

குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட் மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 62% அதிகரிப்பு.

News image
Updated On :23 மே 2025, 8:14 pm IST

புதுதில்லி: குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 62 சதவிகிதம் அதிகரித்து ரூ.211 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் அதன் நிகர லாபம் ரூ.130 கோடியாக இருந்தது. அதே வேளையில் கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.2,218 கோடியிலிருந்து ரூ.2,177 கோடியாகக் குறைந்துள்ளது.

2024-25 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டு ரூ.497 கோடியிலிருந்து ரூ.597 கோடியாக அதிகரித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் ரூ.8,399 கோடியாக இருந்த மொத்த வருமானம் கடந்த நிதியாண்டு ரூ.8,393 கோடியாகக் குறைந்துள்ளது.

மேம்பட்ட விளைவுகள் பலனாக தீவனம் அதிகரிப்பும், அதே வேளையில் எரிபொருள் விலை லாபத்தை மேம்படுத்த உதவியதாக தெரிவித்தார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி. நடராஜன்.

குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், குஜராத் அரசு மற்றும் குஜராத் மாநில உரங்கள் மற்றும் ரசாயனங்கள் லிமிடெட் ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு கூட்டுத் துறை நிறுவனமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.