நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாட்டா இந்தியாவின் 4-வது காலாண்டு லாபம் 36% சரிவு!

காலணி உற்பத்தி நிறுவனமான பாட்டா இந்தியா தனது இயக்க லாபம் 36 சதவிகிதம் குறைந்து ரூ.37 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 மே 2025, 8:39 pm IST

புதுதில்லி: காலணி உற்பத்தி நிறுவனமான பாட்டா இந்தியா தனது இயக்க லாபம் 36 சதவிகிதம் குறைந்து ரூ.37 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

2023-24 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனமானது தனது செயல்பாட்டிலிருந்து ரூ.58 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இந்த காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வருவாய் ரூ.788 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் அது ரூ.798 கோடியாக இருந்தது என்று பாட்டா இந்தியா தெரிவித்துள்ளது.

தேவையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை கடந்து சென்ற போதிலும், நாங்கள் சரியான எண்களை பெற முடிந்தது என்றார் பாட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குஞ்சன் ஷா.

செப்டம்பர் 2024ல் ஏற்கனவே செலுத்தப்பட்ட ஒரு பங்கிற்கு ரூ.10 என்ற இடைக்கால ஈவுத்தொகையுடன் கூடுதலாக, ஒரு பங்கிற்கு ரூ.9 இறுதி ஈவுத்தொகையை அதன் வாரியம் பரிந்துரைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் பாட்டா இந்தியாவின் பங்குகள் 0.29 சதவிகிதம் குறைந்து ரூ.1,275.60 ஆக மும்பை பங்குச் சந்தையில் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.