மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

சம்வர்தனா மதர்சன் 4-வது காலாண்டு லாபம் 23% சரிவு!

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், மார்ச் 2025ல் முடிவடைந்த 4-வது காலாண்டு முடிவில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமானது 23 சதவிகிதம் சரிந்து ரூ.1,050 கோடியாக உள்ளது என்றது.

News image
Updated On :29 மே 2025, 7:14 pm IST

புதுதில்லி: ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை தயாரிப்பாளரான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், மார்ச் 2025ல் முடிவடைந்த 4-வது காலாண்டு முடிவில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமானது 23 சதவிகிதம் சரிந்து ரூ.1,050 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையான மாதங்களில் நிறுவனமானது ரூ.1,372 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்தது. செயல்பாடுகளிலிருந்து அதன் மொத்த வருவாய் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.27,058 கோடியிலிருந்து ரூ.29,317 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதியாண்டு 2025ல் ரூ.3,803 கோடியாக இருந்த அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், கடந்த ஆண்டு இது ரூ.2,716 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருவாய் ரூ.98,692 கோடியிலிருந்து ரூ.1,13,663 கோடியாக அதிகரித்துள்ளது.

ரூ.1 லட்சம் முக மதிப்புள்ள, மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு, அதன் வாரியம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 2.29 சதவிகிதம் உயர்ந்து ரூ.152.15 ஆக முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.