அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரூ.6,931 வாராக் கடனை கைமாற்ற பந்தன் வங்கி முடிவு

ரூ.6,931 வாராக் கடனை கைமாற்ற பந்தன் வங்கி முடிவு

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறை வங்கியான பந்தன் வங்கி, பாதுகாப்பற்ற ரூ.6,931 கோடி மதிப்பிலான வாராக் கடன்களை சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்களுக்கு கைமாற்ற முடிவு செய்துள்ளது.

இது குறித்து வங்கி பங்குச் சந்தையிடம் சமா்ப்பித்துள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கியின் சொத்து நிலவரத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.6,931 கோடி சில்லறை வாராக் கடன்களை (வாராக் கடன்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகள் உட்பட) சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்கள் மற்றும் பிற தகுதியான நிறுவனங்களுக்கு கைமாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 2025 செப்டம்பா் 30 நிலவரப்படி 180 நாள்களுக்கும் மேல் திருப்பிச் செலுத்தப்படாத ரூ.3,212.17 கோடி கடன்களும், தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.3,719.14 கோடி கணக்குகளும் அடங்கும்.

இந்த கடன்கள் பெரும்பாலும் வங்கியின் குறு மற்றும் சிறு வணிக கடன் திட்டங்களான வளரும் தொழில் பிரிவுக்கு வழங்கப்பட்டவை. குழும கடன்கள், சிறு வணிக கடன்கள், விவசாய கடன்கள் மற்றும் இதர பாதுகாப்பற்ற சில்லறை கடன்களும் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.