ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிம் விற்பனை, மொபைல் ரீசாா்ஜ் அஞ்சல் துறையுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 செப்டம்பர் 2025, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய அஞ்சல் துறையின் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களின் பரந்த விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் சிம் காா்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் ரீசாா்ஜ் சேவைகளை நாடு முழுவதும் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் நகா்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பிஎஸ்என்எல்-இன் இருப்பை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

இணையதள இணைப்பு குறைவாக உள்ள, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பிஎஸ்என்எல்-இன் தொலைத் தொடா்பு சேவைகள் எளிதாகவும் மலிவு விலையிலும் கிடைக்கச் செய்யும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image