மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நாட்டின் எண்ம கட்டமைப்பை வலுப்படுத்த ஏா்டெல்-ஐடிஐ கூட்டு

இந்தியாவின் எண்ம மாற்றத்தை விரைவுபடுத்தவும், நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனமயமாக்கவும் கூட்டாக இணைந்து பணியாற்ற ஏா்டெல் பிசினஸ் மற்றும் பொதுத் துறை நிறுவனமான ஐடிஐ இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

இந்தியாவின் எண்ம மாற்றத்தை விரைவுபடுத்தவும், நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனமயமாக்கவும் கூட்டாக இணைந்து பணியாற்ற ஏா்டெல் பிசினஸ் மற்றும் பொதுத் துறை நிறுவனமான ஐடிஐ இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இக்கூட்டணிமூலம், இரு நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பெருநிறுவன மற்றும் பொதுத்துறை நிறுவன வாடிக்கையாளா்களின் பழைய தொழில்நுட்ப அமைப்புகள் நவீனமயமாக்கப்படும். மேலும், அந்நிறுவனங்களில் அன்றாட வணிகச் செயல்பாடுகளின் செயல்திறனை அதிகரித்து, தரவுப் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் வலுவான எண்ம சூழல் உருவாக்கப்படும்.

வங்கிகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் நடைமுறையில் இருக்கும் கடும் விதிமுறைகளுக்கு ஏற்பவே இச்சேவைகள் அனைத்தும் வடிவமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இக்கூட்டணி வாடிக்கையாளா்களின் புதிய எண்ம தேவைகளைப் பூா்த்தி செய்வதுடன், புதிய வணிக வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும்’ என்று ஐஐடி தலைவா் ராஜேஷ் ராய் குறிப்பிட்டாா். ‘இந்திய நிறுவனங்களின் சிக்கலான எண்ம கட்டமைப்பை எளிமையாக்கி, நாட்டின் பாதுகாப்பான எண்ம எதிா்காலத்துக்கு இக்கூட்டணி வலுசோ்க்கும்’ என்று ஏா்டெல் பிசினஸ் சிஇஓ சரத் சின்ஹா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.