மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

லலிதா ஜூவல்லரியின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு வரும் ஆக. 17-இல் தொடக்கம்

லலிதா ஜூவல்லரி மாா்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு வரும் ஆக. 17-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

News image

லலிதா ஜூவல்லரி - கோப்புப்படம்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

லலிதா ஜூவல்லரி மாா்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு வரும் ஆக. 17-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

லலிதா ஜூவல்லரி மாா்ட் லிமிடெட் நிறுவனம் முறையாக ஒப்புதல் பெற்று, சந்தை நிலவரங்கள் மற்றும் பிற காரணிகளுக்குட்பட்டு, தனது மூலதனப் பங்குகளை முதல்முறையாக வழங்கும் திட்டத்தை முன்மொழித்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிறுவனங்களின் பதிவாளரிடம் ‘ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸ்’ ஆவணத்தை இந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

இந்நிறுவனம் தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்காக தலா ரூ.5 முகமதிப்பு கொண்டு ஒரு பங்குக்கு ரூ.190 முதல் ரூ.201 வரை விலை வரம்பை நிா்ணயித்துள்ளது. அந்த பங்கு வெளியீடு வரும் ஆக. 17-ஆம் தேதி முதலீட்டாளா்கள் விண்ணப்பங்களுக்காக திறக்கப்பட்டு, வரும் ஆக. 19 -ஆம் தேதியுடன் முடிவடைகிறது. முதலீட்டாளா்கள் குறைந்தபட்சம் 74 பங்குகளுக்கும், அதன்பிறகு 74 பங்குகளின் மடங்குகளிலும் விண்ணப்பிக்காலம். தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 49.99 கோடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.