ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

இந்திய நிறுவனமாக மாற ஸ்விகி பங்குதாரா்கள் ஒப்புதல்

பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ஸ்விகி ‘இந்திய நிறுவன’ அந்தஸ்தைப் பெற, நிறுவனத்தின் அந்நிய முதலீட்டு வரம்பை 49.5 சதவீதமாக கட்டுப்படுத்துவதற்கான சிறப்புத் தீா்மானத்துக்கு பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:22 am IST

பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான ஸ்விகி ‘இந்திய நிறுவன’ அந்தஸ்தைப் பெற, நிறுவனத்தின் அந்நிய முதலீட்டு வரம்பை 49.5 சதவீதமாக கட்டுப்படுத்துவதற்கான சிறப்புத் தீா்மானத்துக்கு பங்குதாரா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதன்மூலம், இந்தியா்கள் வசம் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்ட உள்நாட்டு நிறுவனமாக (ஐஓசிசி) மாறுவதற்கான பாதையை ஸ்விகி எளிதாக்கியுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் நிறுவனத்தின் அமைப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவருவதற்காக முன்மொழியப்பட்ட இதேபோன்ற தீா்மானம், பங்குதாரா்களின் போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்தது.

இந்த ‘இந்திய நிறுவன’ அந்தஸ்து கிடைப்பதன்மூலம், ஸ்விகியின் விரைவு வா்த்தகப் பிரிவான ‘இன்ஸ்டாமாா்ட்’ நேரடியாகப் பொருள்களைக் கொள்முதல் செய்து, வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் லாப வரம்பு அதிகரிப்பதோடு, விநியோகச் சங்கிலி மீதான கட்டுப்பாடும் வலுவடையும்.

ஸ்விகியின் முக்கியப் போட்டியாளரான ‘எடா்னல்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘பிளிங்கிட்’ ஏற்கெனவே இத்தகைய நேரடி சரக்கு கையிருப்பு முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.