மும்பை: கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் குறியீடு ஆகியவை அவற்றின் உச்ச நிலையிலிருந்து சரிந்ததையடுத்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ. 94.50 ஆக நிறைவு.
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 79 டாலர் வரைக்கும் சரிந்தததால், உள்நாட்டில் பங்குச் சந்தை சாதகமான நிலைமையில் நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.46 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூ. 94.29 முதல் ரூ. 94.60 என்ற வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 10 காசுகள் உயர்ந்து ரூ. 94.50 ஆக நிலைபெற்றது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.60 ஆக நிறைவடைந்தது.
Summary
The rupee appreciated 10 paise to close at 94.50 against the US dollar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








