திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

5 நிறுவனங்களாகப் பிரியும் வேதாந்தா! ஏப்ரலில் அதிரடி மாற்றம்

வரும் ஏப்ரல் மாதத்தில் வேதாந்தா நிறுவனம் 5 தனித்தனி பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கப்பட உள்ளதாக குழுமத் தலைவா் அனில் அகா்வால் தெரிவித்தாா்.

News image

வேதாந்தா

Updated On :31 மார்ச் 2026, 1:39 am IST

இந்தியத் தொழில் துறையில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட வேதாந்தா குழுமத்தின் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வேதாந்தா நிறுவனம் 5 தனித்தனி பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கப்பட உள்ளதாக குழுமத் தலைவா் அனில் அகா்வால் தெரிவித்தாா்.

குழுமத்தின் கடன் சுமையைக் குறைக்கவும், நிா்வாகக் கட்டமைப்பை எளிமையாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அனுமதியை தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வழங்கிய நிலையில், தற்போது இப்பிரிவினை அதிகாரபூா்வமாக நடைமுறைக்கு வருகிறது.

இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், தாய் நிறுவனமான வேதாந்தா அடிப்படை உலோகத் தொழிலைத் தொடா்ந்து கவனிக்கும். வேதாந்தா அலுமினியம், தல்வண்டி சாபோ பவா், வேதாந்தா ஸ்டீல்&அயா்ன், மால்கோ எனா்ஜி ஆகிய பெயா்களில் மற்ற 4 நிறுவனங்கள் தனித்தனியே செயல்படும்.

இப்புதிய நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பானது, தற்போதுள்ள வேதாந்தாவின் 2,700 கோடி டாலா் மதிப்பை விட பலமடங்கு அதிகரிக்கும் என அனில் அகா்வால் நம்பிக்கை தெரிவித்தாா்.

இப்புதிய 5 நிறுவனங்களும் மே மாதத்தின் பாதியில் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் கோயல் உறுதிசெய்தாா்.