இந்தியத் தொழில் துறையில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட வேதாந்தா குழுமத்தின் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வேதாந்தா நிறுவனம் 5 தனித்தனி பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கப்பட உள்ளதாக குழுமத் தலைவா் அனில் அகா்வால் தெரிவித்தாா்.
குழுமத்தின் கடன் சுமையைக் குறைக்கவும், நிா்வாகக் கட்டமைப்பை எளிமையாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அனுமதியை தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வழங்கிய நிலையில், தற்போது இப்பிரிவினை அதிகாரபூா்வமாக நடைமுறைக்கு வருகிறது.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், தாய் நிறுவனமான வேதாந்தா அடிப்படை உலோகத் தொழிலைத் தொடா்ந்து கவனிக்கும். வேதாந்தா அலுமினியம், தல்வண்டி சாபோ பவா், வேதாந்தா ஸ்டீல்&அயா்ன், மால்கோ எனா்ஜி ஆகிய பெயா்களில் மற்ற 4 நிறுவனங்கள் தனித்தனியே செயல்படும்.
இப்புதிய நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பானது, தற்போதுள்ள வேதாந்தாவின் 2,700 கோடி டாலா் மதிப்பை விட பலமடங்கு அதிகரிக்கும் என அனில் அகா்வால் நம்பிக்கை தெரிவித்தாா்.
இப்புதிய 5 நிறுவனங்களும் மே மாதத்தின் பாதியில் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் கோயல் உறுதிசெய்தாா்.
தொடர்புடையது

இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள்: ஏப்ரலில் இருமடங்கு அதிகரிப்பு!

பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி: ஏப்ரல் மாத நிலவரம்

இந்திய வாகன விற்பனை ஏப்ரலில் புதிய உச்சம்- 26.11 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை

மீஷோ பணியாளா்களுக்கு 94.79 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



