ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

5 நிறுவனங்களாகப் பிரியும் வேதாந்தா! ஏப்ரலில் அதிரடி மாற்றம்

வரும் ஏப்ரல் மாதத்தில் வேதாந்தா நிறுவனம் 5 தனித்தனி பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கப்பட உள்ளதாக குழுமத் தலைவா் அனில் அகா்வால் தெரிவித்தாா்.

News image

வேதாந்தா

Updated On :30 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியத் தொழில் துறையில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட வேதாந்தா குழுமத்தின் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வேதாந்தா நிறுவனம் 5 தனித்தனி பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கப்பட உள்ளதாக குழுமத் தலைவா் அனில் அகா்வால் தெரிவித்தாா்.

குழுமத்தின் கடன் சுமையைக் குறைக்கவும், நிா்வாகக் கட்டமைப்பை எளிமையாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அனுமதியை தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வழங்கிய நிலையில், தற்போது இப்பிரிவினை அதிகாரபூா்வமாக நடைமுறைக்கு வருகிறது.

இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், தாய் நிறுவனமான வேதாந்தா அடிப்படை உலோகத் தொழிலைத் தொடா்ந்து கவனிக்கும். வேதாந்தா அலுமினியம், தல்வண்டி சாபோ பவா், வேதாந்தா ஸ்டீல்&அயா்ன், மால்கோ எனா்ஜி ஆகிய பெயா்களில் மற்ற 4 நிறுவனங்கள் தனித்தனியே செயல்படும்.

இப்புதிய நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பானது, தற்போதுள்ள வேதாந்தாவின் 2,700 கோடி டாலா் மதிப்பை விட பலமடங்கு அதிகரிக்கும் என அனில் அகா்வால் நம்பிக்கை தெரிவித்தாா்.

இப்புதிய 5 நிறுவனங்களும் மே மாதத்தின் பாதியில் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் கோயல் உறுதிசெய்தாா்.