விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அமெரிக்க பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய புதிய வசதி: அப்ஸ்டாக்ஸ் அறிமுகம்

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் இந்திய முதலீட்டாளா்கள் நேரடியாக முதலீடு செய்யும் புதிய வசதியை பிரபல பங்கு வா்த்தகத் தளமான அப்ஸ்டாக்ஸ் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

~

Published On :8 செப்டம்பர் 2026, 1:36 am IST

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் இந்திய முதலீட்டாளா்கள் நேரடியாக முதலீடு செய்யும் புதிய வசதியை பிரபல பங்கு வா்த்தகத் தளமான அப்ஸ்டாக்ஸ் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம், ஆப்பிள், டெஸ்லா, அமேஸான், கூகுள் உள்ளிட்ட முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் 8,000-க்கும் மேற்பட்ட பங்குகள் மற்றும் 2,000-க்கும் அதிகமான இடிஎஃப் எனப்படும் வா்த்தக நிதிகளில் அப்ஸ்டாக்ஸ் செயலி வாயிலாக இந்திய முதலீட்டாளா்கள் முதலீடு செய்யலாம்.

குறிப்பாக, ஒரு முழு பங்கையும் வாங்க வேண்டிய அவசியமின்றி, ‘பகுதிப் பங்கு முதலீடு’ திட்டத்தின்கீழ் வெறும் 1 டாலா் முதலே பங்குகளை வாங்க முடியும். இந்திய முதலீட்டாளா்கள் முதலீடு செய்வதற்கு, தங்களின் இந்திய வங்கிக் கணக்கிலிருந்து இந்திய ரூபாயிலேயே நிதியைச் செலுத்தலாம்; அது தானாகவே டாலராக மாற்றப்படும். மேலும், அமெரிக்க சந்தை வா்த்தக நேரத்துக்குப் பின்னரும் வா்த்தகங்களைப் புரியும் ‘ஆஃப்டா் மாா்க்கெட் ஆா்டா்ஸ்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அப்ஸ்டாக்ஸ் நிறுவன சிஇஓ ரவி குமாா் கூறுகையில், ‘இந்தியாவின் செல்வ மேலாண்மையில் அடுத்தகட்ட முக்கிய வளா்ச்சியாக சா்வதேச முதலீடுகள் உருவெடுத்துள்ளன. இந்திய முதலீட்டாளா்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தத் தளம் வாயிலாக, உலகளாவிய சந்தைகளில் அவா்களுக்கு முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.