பட்டாணிச் செடியின் வேர்கள் இரண்டாகப் பாகுபடுத்தப்படுகின்றன. ஒரு பகுதி வேர்கள் ஒரு மண் தொட்டியிலும், மற்றொரு பகுதி வேர்கள் மற்றொரு மண் தொட்டியிலும் வளர்கின்றன. இவற்றில், ஒரு மண் தொட்டியில் செடியின் வளர்ச்சிக்கு வேண்டிய ஊட்டச் சத்துகள் சீராகவும் வேண்டிய அளவும் கிடைக்கின்றன. மற்றொரு தொட்டியிலோ ஊட்டச் சத்துகள் கிடைக்கின்றன. ஆனால், சீரற்றதன்மையில் கிடைக்கின்றன. அதாவது, சில நேரங்களில் அதிகமாக ஊட்டச் சத்துகள் கிடைக்கலாம். சில நேரங்களில் குறைவாகக் கிடைக்கலாம். இப்போது, பட்டாணிச் செடி வேர்களை சீரான ஊட்டச் சத்து கிடைக்கும் தொட்டியிலேயே அதிக அளவில் முளைவிட்டு படரவைக்கிறது. சீரற்றதன்மையில் ஊட்டச் சத்துகள் கிடைக்கும் தொட்டியிலோ அது குறைவான அளவே வேர்கள் படருகின்றன. அதாவது, சீரான அளவில் ஊட்டச் சத்துகள் வேண்டிய அளவு கிடைக்கும்போது செடி தன் வேர்கள் படர்தலை ‘ரிஸ்க்’ எடுக்காதவண்ணம் செயல்படுத்துகிறது.