பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

25. குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி

கடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அமர்ந்தபடியே வேலை செய்வதால் எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 6:01 pm IST

கடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அமர்ந்தபடியே வேலை செய்வதால் எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம் 

அமர்ந்தபடியே வேலை செய்தல்:

இன்றைய நாட்களில் கணினி மற்றும் செல்பேசி அதிகம் பயன்படத் தொடங்கிவிட்டது.  நாம் எல்லோரும் அதன் முன்னே மிக நீண்ட நேரம் செலவிடுகிறோம். சொல்லப் போனால் சிலரின் வாழ்க்கை கணினியில்தான் அடங்கியுள்ளது. நான் கூறுவது அமர்ந்தபடியே வேலை செய்வோர் (Sitting Job) உள்ளவர்கள். ஆம் இத்தகைய வேலை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 6-8 மணி நேரம் அமர்ந்தபடியே வேலை செய்கின்றனர். இன்றைய ஆராய்ச்சிகள் "Sitting is new Smoking" எனக் கூறுகின்றன. ஏனெனில் அதிக நேரம் உட்காருவதால் முதுகு வலி மட்டுமல்ல உயிரையே கொல்லும்  நோய்களும் வரும் எனக் கூறுகின்றன. இப்போது அதிக நேரம் உட்காருவதால் முதுகு வலி எப்படி ஏற்படுகின்றது என்பதை பார்ப்போம். 

நம் முதுகுத் தண்டில் ஒன்றன் மேல் ஒன்றாக கிட்டத்தட்ட நூற்றுகணக்கான தசைகள் உள்ளன. இவை எல்லாம் Postural Muscles என அழைக்கப்படும் மிகவும் ஆழமான தசைகள். அதாவது இந்த தசைகள் உங்களின் உட்காரும், நிற்கும், நடக்கும் Posture-களை தீர்மானிக்கும். எனவே இந்த தசைகளில் எதாவது பிரச்னை ஏற்பட்டால், அது உங்களின் முழு உடலின் Posture-ஐ பாதிக்கும்.

நான் மேலே கூறியது போல் நீங்கள் அதிக நேரம் உட்கார உட்கார உங்களின் இந்த தசைகள் கடினமடைகின்றன (Stiff). இவ்வாறு நாளுக்கு நாள் இந்த தசைகள் கடினமடைந்து உங்கள் முதுகுத் தண்டின் இயக்கத்தை (Mobility) குறைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு இந்த தசைகளின் கடினத்தன்மை உங்கள் முதுகெலும்பின் வடிவத்தை (Shape) பாதிக்கச் செய்கின்றன. உதாரணமாக, நம் முதுகெலும்பின் சரியான வடிவத்தை பார்ப்போம். உங்கள் கழுத்து முதுகெலும்பு குழிந்தும் (Concave), மேல் முதல் நடுமுதுகு குவிந்தும் (Convex), கீழ் முதுகு குழிந்தும் (Concave) இருப்பது தான் சரியான வடிவம் (Shape). ஆனால் நாம் அதிக நேரம் உட்கார்ந்து, உட்கார்ந்து இந்த வடிவம் மாறி விடுகிறது. அதாவது கழுத்து வடிவம் சமாகவும்(Flat), நடுமுதுகு அதிகம் கூன் விழுந்தும், கீழ் முதுகு அதிகம் குழிந்து (Exaggerated arch) விடுகின்றன.  இவை எல்லாம் நாம் அதிக நேரம் ஒரே இடத்தில நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றத்தினால் நம் உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய மாற்றங்களினால் உங்களுக்கு வலி, இயக்கக் குறைவு (Immobility), தசைகளின் இழுவைத் தன்மை குறைவு (Inflexibility) போன்றவை ஏற்படும். போகப் போக தசைகளின் மீதான அழுத்தம் அதிகமாகி 'Disc' ஐ அழுத்த ஆரம்பிக்கும். இதனால் உங்களுக்கு மறத்துப் போதல், ஊசி குத்துவது போன்ற வலி, வலுவிழப்பு (Weakness) போன்றவையும் ஏற்படும்.

இதை தவிர்க்க நீங்கள் அதிக நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும். ஒரு இடத்தில 40  நிமிடங்களுக்கு மேல் உட்காருவதை தவிர்க்க வேண்டும். மேலும் உட்கார்ந்த இடத்திலேயே சில இயக்கப் (Mobility) பயிற்சிகள் செய்வது நல்லது 
உங்கள் முதுகெலும்பின் இயக்கத்துக்கு  தேவையான உடற்பயிற்சிகளை (Exercises) Musculoskelatal பிஸியோதெரபிஸ்டிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.