அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

‘பெண்களைப் பார்த்தா கையெடுத்து கும்பிடற மாதிரி இருக்கனும், கை தட்டி கூப்பிடற மாதிரி இருக்கக் கூடாது’

அப்பாவின் இசைக்கு ரசிகராக இருந்ததோடு மகளின் நடிப்புக்கும் பிள்ளையார் சுழியிட்டதில் பாலசந்தரும் இவருக்கு ஒரு தந்தையானார். ‘சிந்து பைரவி’ தொலைக்காட்சிக்காக ‘சகானா’வாகி வெளிவந்தது. சிந்து கதாபாத்திரத்துக

News image
Updated On :4 ஜனவரி 2019, 4:43 pm IST

கர்நாடக இசைப் பாடகியும் நடிகையுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி ஒரு தேர்ந்த பாரம்பரிய இசைக்குடும்பத்தின் 8 ஆம் தலைமுறை வாரிசு. இவர் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னரே இயக்குனர் கே.பாலசந்தர் மூலமாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். அறிமுகம் நேர்ந்ததும் கூட இசை தொடர்பான ஒரு மெகாத்தொடரில் தான். சிந்து பைரவி திரைப்படத்தின் தொடர்ச்சியை மெகாத்தொடராக்கும் முயற்சியில் இருந்த இயக்குனர் கே.பாலசந்தர் அதில் சிந்துவாக நடித்திருந்த சுஹாசினி கதாபாத்திரத்துக்கு பொருத்தமான புதுமுகம் தேடியிருக்கிறார். அவரது தேடுதலில் திடீரென அகப்பட்டவர் தான் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி. முன்பே இவரது தந்தையின் விசிறியாக இருந்த பாலசந்தருக்கு இவ்விஷயத்தில் சந்தோஷமே! அப்பாவின் இசைக்கு ரசிகராக இருந்ததோடு மகளின் நடிப்புக்கும் பிள்ளையார் சுழியிட்டதில் பாலசந்தரும் இவருக்கு ஒரு தந்தையானார். ‘சிந்து பைரவி’ தொலைக்காட்சிக்காக ‘சகானா’வாகி வெளிவந்தது. சிந்து கதாபாத்திரத்துக்கு அனுராதா நியாயம் செய்திருந்தார்.

அனுராதாவுடனான முழுமையான நேர்காணலுக்கான லிங்க்...

அனுராதா கிருஷ்ணமூர்த்தியுடனான இந்த நோ காம்ப்ரமைஸ் நேர்காணலில் கச்சேரியானாலும் சரி, சின்னத்திரை படப்பிடிப்புகளானாலும் சரி தன்னை எப்படி எக்ஸ்போஸ் செய்து கொள்ள அவருக்குப் பிடித்தமோ அவ்விதமாகவே அவர் தன்னை முன் வைத்து வந்திருக்கிறார். எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டிய இடங்களில் எல்லாம் மிகத் தண்மையாக தனது மறுப்பைக் கூறவும் அவர் தயங்கியதாகத் தெரியவில்லை. தான் இப்படித்தான் இருக்க வேண்டும். நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. கச்சேரிகளில் அது கல்யாணக் கச்சேரி என்ற போதும் சினிமா பாடல்களைப் பாடுவதில்லை என்பன போனற பல நோ காம்ப்ரமைஸ் கொள்கைகளை அவர் மிகத்தெளிவாக முன் வைத்திருக்கிறார்.

முழுநேர்காணலைக் காண்பவர்கள் மறவாமல் நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களையும், நிறைகுறைகளையும்  யூடியூப் தளத்திலோ அல்லது கட்டுரையின் கீழ் கமெண்ட்டுகளாகவோ பகிரவும்.

இது போன்ற நேர்காணல் நிகழ்ச்சிகளைக் காண மறவாமல் தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும்.
 

Related Article

கே.பாலசந்தர் சார் கிட்ட அப்படி, இப்படில்லாம் நடிக்க மாட்டேன்னு நான் தான் கண்டீஷன் போட்டேன்!

விடியோக்களால் புகைப்படங்களின் இடத்தை ஒருக்காலும் ரீபிளேஸ் செய்ய முடியாது!

எனக்குத் தெரிந்த எஸ்.வி.சேகர், ராதாரவி கண்ணியமானவர்கள்!

ஒன்னு பணம் வரணும் இல்லனா புகழ் வரணும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா?!

ஐ லவ் லைஃப்... இந்த 95 வயதுப் பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.