கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஐப்ரோ எழுதுவது எப்படி என்று பாலசந்தர்கிட்ட போய் கேட்டேன்

இவர்களைப் பற்றி - ஸ்ரீ வித்யா

News image
Updated On :2 மார்ச் 2017, 6:30 pm

கவியோகி வேதம்

கே.பாலசந்தர் 

டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்ததெல்லாம் சுவையான அனுபவங்கள்.'நூற்றுக்கு நூறு' தான் என் முதல் படம் அவருடன்.

அதில் எனக்கு வித்தியாசமான ரோல். பொதுவாவே எனக்கு படத்தில் டூயட் பாடுவது பிடிக்காது. அவையெல்லாம் எனக்கு தேவையில்லை என்றே சொல்வேன். சொல்கிறேன்.

அந்தப் படத்திலெனக்கு எனக்கு கதாநாயகி வேடம் இல்லை. ஒருமாதிரியான வில்லி வேடம்தான். பாலசந்தர் படத்தில் நடிக்க ஆரம்பித்ததும்தான் பலவிஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

அதற்கு முன்பு வரை படங்களில் டையலாக் என்றால் அது டையலாக் போலவே இருக்கும். இன்னதுதான்..இப்படித்தான் பேசணும் என்று ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டுதான் எழுதுவார்கள்.

அந்த ட்ரெண்டை மாற்றினார் பாலசந்தர். இயல்பாய், யதார்த்தமாய், சர்வ சாதாரணமாய் முதன் முதலில் அறிமுக ப்படுத்தியது அவர்தான்.          

அது போல நடிப்பிலயும் 'கேமராவைப் பார்க்காம நடி; கேமராங்கறது நம் சவுகரியத்துக்குத்தான். அதைக்கண்டு பயப்படவே கூடாது. கேமரான்னு ஒன்னு இருக்கறதா நினைக்காம நடி.என்பார்.

புது ஆர்ட்டிஸ்ட்,பழைய ஆர்ட்டிஸ்ட், பெரிய, சிறிய ஆர்ட்டிஸ்ட் என்கிற பேதமே அவர் பார்த்ததில்லை.

யாராக இருந்தாலும் சரியா வந்தா சரி.   இல்லேன்னா சரியா வர வைப்பார். எல்லோரையுமே ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுவார். ஆர்டிஸ்ட்டுக்கு பந்தாவெல்லாம் கூடாது அப்டிங்குறத வலியுறுத்தி வற்புறத்துனதுல அவருக்கு முதலிடம் உண்டு. எந்த விஷயத்திலும் தன் தனித்தன்மையை பதிப்பார். பாலசந்தரோட பல படங்களில் நடிச்சிருந்தாலும் நான் அவரோட பேசினது கொஞ்சம்தான்.

சினிமாவில் ஒவ்வொரு நாள் நடிக்கிறதுக்கு ஒரு அனுபவம். தினமும் புதிது புதிதாய் ஏதாவது கத்துக் கொண்டிருக்கேன்.      

பாலசந்தரின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில்நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். அதுவரை எனக்கு மேக்கப்பில் எந்த நுணுக்கம், அவசியம் எதுவும் தெரியாது. கண் ஐப்ரோ எப்படி எழுதுவது என்று கூட  தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.எப்படி என்று பாலசந்தர்கிட்ட போய் கேட்டேன். 

இதையெல்லாமா போய் அவரிடம் கேட்பார்கள் ..என்று மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள்.     ஆனால் பாலசந்தர் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. ஒரு குடும்பத்துப்பெண், எப்போதும் பிசி, குடும்ப வேலை, பலவிதமான பொறுப்புகளுக்கு இடையே அவளுக்கு அலங்கரிக்க  முடியாத நிலை. இந்த ரோலுக்கு எப்படி மேக்கப் இருக்க வேண்டும் என்று அவர்தான் சொல்லித்தந்தார்.     

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.03.84 இதழ்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.