நீ கண் சிமிட்டினால்: கவிஞர் பி.மதியழகன்

Updated on
1 min read

கலி விருத்தப்பா

உடைந்த கம்மாய்களும் உழவர் மறுவாழ்வும்
இடைஞ்சலாய் இருக்கும் இன்னல்கள் யாவும்
துடைத்தொழிப்பார் மக்கள் துயர் துடைப்பார்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

நாட்டிலே நடக்கும் நல்லது கெட்டதெல்லாம்
பாட்டினில் பாடும் பாவலர்கள் கருத்துக்களை
கேட்டேமுனைப்போடு காட்டுவார் பணியில்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

முத்தமிழ் அழித்திட முயலுவோர் மூக்கறுப்பார்
எத்திசையில்எதிரிகள்ஏவும் ஏவுகணைகளை
வித்தைகள் கற்றிட்ட வீரர்கள் வேரறுப்பார்கள்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

மதச்சண்டை மடமை மாறணும் மாண்புடனே
இதயம் உள்ளார் இரக்கமனம் வாழவேண்டும்
இதிகாசங்கள் சொன்ன இன்புடனே இருப்பார்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com