முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 8

கைவிட்டுச் செல்லாதே

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 5:57 pm IST


பாடல் 8

அசுரர்கள் தலைப்பெயில் எவன்கொல் ஆங்கு என்று
ஆழும் என் ஆர் உயிர், ஆன் பின் போகேல்,
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும், என் கை கழியேல்,
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசி செய் நுண் இடை இள ஆய்ச்சியர், நீ
உகக்கும் நல்லவரொடும் உழிதராயே.

எம்பெருமானே, நீ பசு மேய்க்கச் செல்லும்போது அங்கே அசுரர்கள் வந்தால் என்ன ஆகுமோ என்று என் அரிய உயிர் துன்பத்தில் மூழ்குகிறது. ஆகவே, நீ பசுக்களின் பின்னால் போகாதே, உன்மீது வைத்துள்ள ஈடுபாடும், விருப்பமும், கலவியும் உள்ளிருந்து என்னை நலியச்செய்கின்றன. ஆகவே, என்னைக் கைவிட்டுச் செல்லாதே, ஈர்க்கின்ற உன்னுடைய தாமரைபோன்ற திருக்கண்களையும், திருவாயையும், திருக்கைகளையும், பீதக உடையையும் காண்பித்துக்கொண்டு இங்கே வா, உனக்குப் பிடித்த, ஒசிந்த, நுட்பமான இடையை உடைய இள ஆய்ச்சியர்களோடு வா, அங்குமிங்கும் திரிந்துகொண்டு இங்கேயே இரு, (பசுக்களை மேய்க்கச் செல்லாதே.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.