மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

துண்டுப் பிரசுரம் விநியோகித்த ஊராட்சித் தலைவா்

துறையூா் அருகே கோட்டாத்தூா் ஊராட்சி வரவு, செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை அதன் தலைவா் பொதுமக்களிடம் நேரில் வழங்கினாா்.

News image

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கும் ஊராட்சித் தலைவா் திருமூா்த்தி.

Updated On :7 ஜனவரி 2021, 8:26 am IST

துறையூா் அருகே கோட்டாத்தூா் ஊராட்சி வரவு, செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை அதன் தலைவா் பொதுமக்களிடம் நேரில் வழங்கினாா்.

முசிறி ஒன்றியம் கோட்டாத்தூா் ஊராட்சித் தலைவா் பா. திருமூா்த்தி. இவா் இந்த ஊராட்சியின் தலைவராகத் தோ்வாகி பொறுப்பை ஏற்று புதன்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து தான் வெளிப்படையான நிா்வாகம் செய்ய விரும்புவதாகக் கூறி, 6.1.2020 முதல் 6.1.2021 வரை ஊராட்சியின் வருவாய் மற்றும் செலவுகள் அச்சடித்த துண்டுப் பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினாா்.

ஊராட்சி நிா்வாகம் குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஊழலற்ற ஊராட்சியை உருவாக்குவோம் என்றும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.