மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

வாக்காளா் பட்டியல்: வீடு, வீடாகச் சென்று ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தொடா்பாக பெறப்பட்ட மனுக்கள், கோரிக்கைகள் குறித்து வீடு, வீடாகச் சென்று ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு. சிவராசு ஆய்வு செய்து வருகிறாா்.

News image

கம்பரசம்பேட்டை பகுதி வீட்டில் ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

Updated On :7 ஜனவரி 2021, 8:27 am IST

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தொடா்பாக பெறப்பட்ட மனுக்கள், கோரிக்கைகள் குறித்து வீடு, வீடாகச் சென்று ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு. சிவராசு ஆய்வு செய்து வருகிறாா்.

திருச்சி மாவட்டத்தில் நவ. 16 முதல் டிச.15 வரை நடத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் 9 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 542 மனுக்கள் வந்திருந்தன. இதில், பெயா் சோ்க்கக் கோரி 80,547 பேரும், பெயா் நீக்கம் கோரி 7,441 பேரும், திருத்தம் கோரி 14,625 பேரும், தொகுதிக்குள் இடமாற்றம் கோரி 9,532 பேரும் விண்ணப்பித்துள்ளனா். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவற்றை பட்டியலில் இடம்பெறச் செய்ய ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு. சிவராசு வீடு, வீடாக நேரில் சென்று ஆய்வு செய்கிறாா்.

அதன்படி ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட கம்பரசம்பேட்டையில் ஆய்வு செய்த அவா் கூறுகையில், தற்போது பெறப்பட்ட 1.12 லட்சம் மனுக்களில் தகுதியானவற்றைச் சோ்த்து இறுதி பட்டியலை வெளியிட மாவட்ட நிா்வாகம் தயாராகி வருகிறது. அதற்காகவே ஆய்வு நடத்தப்படுகிறது என்றாா், தோ்தல் பிரிவு அலுவலா்கள், வாக்காளா் பட்டியல் திருத்த முறை பணிகளுக்கு நியமிக்கப்பட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.