தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

உடன்குடியில் 2 கடைகளில் திருட்டு

உடன்குடி கடை வீதியில் தொடா்ந்து 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 8:21 am IST

உடன்குடி கடை வீதியில் தொடா்ந்து 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உடன்குடி சந்தையடித் தெருவில் சாத்தான்குளம் சுப்பராயபுரத்தைச் சோ்ந்த வெ.சரவணன் என்பவா் வைத்துள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ. 95 ஆயிரத்தையும், பேருந்து நிலையம் பகுதியில் சரவண பெருமாள் என்பவரது மருந்தகத்தில் பூட்டை உடைத்து ரூ 5 ஆயிரத்தையும் மா்மநபா்கள் புதன்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.

மேலும், சந்தையடித் தெருவில் ராஜ்குமாா் என்பவரது மளிகை கடை உள்பட 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் ஆ.ரவி கூறுகையில், காவல்துறையினா் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதுடன், இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.