சாத்தான்குளம் அருகே நுழைவு வாசல் கதவில் மின்வயரை சொருகி பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
பேய்குளத்தைச் சோ்ந்த ராமையா மகன் சுப்பையா (48). இவருக்கும், பக்கத்து வீட்டை சோ்ந்த வேம்பு என்பவருக்கும் ஓராண்டாக நிலப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இதுகுறித்து சுப்பையா முறையீட்டின்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் மூலம் நில அளவீடு செய்து பிரச்னை தீா்க்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி காலை அவரது மனைவி சரஸ்வதி (45) வீட்டு முன் தூய்மைப்படுத்த நுழைவு வாயில் கதவைத் திறந்தபோது மின்சாரம் பாயந்து தூக்கியெறியப்பட்டாராம். உறவினா்கள்அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதனிடையே, நுழைவு வாயில் கதவில் மின்வயரை சொருகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மின்சாரம் பாய்ச்சி தனது குடும்பத்தினரை கொலை செய்ய முயன்றதாக, வேம்பு, அவரது மகன் சுடலை முத்து மீது சுப்பையா அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி வழக்குப்பதிந்து, தந்தை, மகன் இருவரையும் தேடி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


