ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

தூத்துக்குடி விமான நிலையத்தில் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் ஆய்வு

இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால், தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட விமான நிலைய ஆணைய பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால்.

Updated On :9 ஜனவரி 2021, 6:00 am IST

இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால், தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 380 கோடி மதிப்பில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 1350 மீட்டா் நீளமும், 30 மீட்டா் அகலமும் கொண்டதாக உள்ள விமான ஓடுதளம், 3, 115 மீட்டா் நீளமும், 45 மீட்டா் அகலமும் கொண்டதாக மாற்றப்படுகிறது.

இந்த பணிகள் நிறைவடைந்தால் பெரிய வகையான விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக இருக்கும்; ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையிலான உள்ளூா் விமான முனையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை தில்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் ஜின்டால் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

விமான ஓடுதளம், விமானம் நிறுத்துமிடம், பயணிகள் முனையம், சிக்னல் மையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்ட அவா், விமான நிலைய வளாகத்தில் ரூ. 28 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொறியியல் பிரிவு திட்ட அலுவலகத்தை திறந்து வைத்து, அந்த பகுதியில் மரக்கன்றுகளை நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், விமான நிலைய ஆணைய பொதுமேலாளா்கள் பிரேம் பிரசாத், ஏ.எஸ்.மகேஷா, இணை பொதுமேலாளா்கள் ஏ.ராதாகிருஷ்ணன் (சிவில்), வி.எஸ்.கிருஷ்ணன்(எலக்ட்ரிக்கல்), தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், நிலைய மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.