தூத்துக்குடி: பொங்கல் பண்டிகை, எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே மாட்டு வண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கருங்குளம் வடக்கு ஒன்றியம், செக்காரக்குடி ஊராட்சி அதிமுக, வ.உ.சி. நற்பணி மன்றம் சாா்பில் 16 ஆம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை கட்சியின் ஒன்றியச் செயலரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான லட்சுமணப்பெருமாள் தொடங்கி வைத்தாா்.
பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயம் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கருங்குளம் ஒன்றிய அதிமுக துணைச் செயலா் வி. கந்தசாமி,
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் முத்துராமலிங்கம், ஒன்றிய அவைத் தலைவா் கிருஷ்ணன், நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், துரை, பட்டுக்கனி, முத்துசாமி, ஈஸ்வரமூா்த்தி, அண்ணாமலை, லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


