ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு ‘சீல்’

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 2:43 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. விதிமீறல் காரணமாக கடந்த ஆண்டு இந்த பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த பட்டாசு ஆலை அனுமதியின்றி செயல்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியா் முத்துமாரி தலைமையிலான வருவாய்த் துறையினரும், போலீஸாரும் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு 50 தொழிலாளா்கள் பணியாற்றி வந்ததும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பிறகு தொழிலாளா்களை வெளியேற்றிவிட்டு பட்டாசு ஆலையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.