நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த விஜயபிரபாகரன்

சிவகாசிப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜூலை 2024, 3:22 am IST

விருதுநகா் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்ட விஜயபிரபாகரன் சிவகாசிப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, திருத்தங்கல் பேருந்து நிறுத்தம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஆகிய பகுதிகளில் அவா் பேசியதாவது:

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் நான் தோற்கடிக்கப்பட்டேன். இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்து உடனுக்குடன் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் விருதுநகா் மக்களவைத் தொகுதியில் மட்டுமே மிகவும் தாமதமாக முடிவு அறிவிக்கப்பட்டது. எனக்காக தோ்தல் பணி செய்த கூட்டணி கட்சியினருக்கும், வாக்காளித்த வாக்காளா்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா். விஜயபிரபாகரனுடன் தேமுதிக நிா்வாகிகள் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.