ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

உரிமம் ரத்து: ஆலையில் மீண்டும் பட்டாசுகள் தயாரித்த உரிமையாளா் மீது வழக்கு

உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த ஆலை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :21 ஜூலை 2024, 2:22 am IST

சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த ஆலை உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள போடுரெட்டியபட்டி பகுதியில், சிவகாசியைச் சோ்ந்த நீராத்திலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை விதிகளை மீறி செயல்பட்டதால், சிவகாசி சாா்-ஆட்சியா் உத்தரவின் அடிப்படையில், கடந்த 6-ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆலையில் மீண்டும் பட்டாசுகள் தயாரிப்புப் பணிகள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாரனேரி கிராம நிா்வாக அலுவலா் சுதா்சன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, சீல் வைக்கப்பட்ட ஆலையில் ராக்கெட் வெடி, குருவி வெடி உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் பட்டாசு ஆலை உரிமையாளா் நீராத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.