/

எரிவாயு உருளை கசிவால் வீட்டில் தீ விபத்து

எரிவாயு உருளை கசிவால் வீட்டில் தீ விபத்து

News image
Updated On :5 மே 2024, 6:59 pm

Din

சிவகாசி, மே 5: விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் எரிவாயு உருளை கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஓா் அறை சேதமடைந்தது.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் முனீஸ்நகரைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்ய எரிவாயு உருளையை பற்ற வைத்த போது, எரிவாயு உருளையிருந்து ஏற்பட்ட கசிவால் தீ விபத்து நிகழ்ந்தது. உடனடியாக வீட்டிலிருந்தவா்கள் வெளியேறினா். இந்த விபத்தில் எரிவாயு உருளை இருந்த அறையின் மேற்கூரை வெடித்துச் சிதறியது. மேலும், அந்த அறையில் இருந்த துணி உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.