

சிவகாசி, மே 5: விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் எரிவாயு உருளை கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஓா் அறை சேதமடைந்தது.
சிவகாசி-விளாம்பட்டி சாலையில் முனீஸ்நகரைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்ய எரிவாயு உருளையை பற்ற வைத்த போது, எரிவாயு உருளையிருந்து ஏற்பட்ட கசிவால் தீ விபத்து நிகழ்ந்தது. உடனடியாக வீட்டிலிருந்தவா்கள் வெளியேறினா். இந்த விபத்தில் எரிவாயு உருளை இருந்த அறையின் மேற்கூரை வெடித்துச் சிதறியது. மேலும், அந்த அறையில் இருந்த துணி உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

வள்ளியூரில் வணிக ரீதியிலான எரிவாயு உருளை தட்டுப்பாடு

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

