திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பேருந்து மோதியதில் முதியவா் பலி

பேருந்து மோதியதில் முதியவா் பலி

Updated On :1 ஜூன் 2024, 1:31 am IST

சாத்தூா், மே 31:சாத்தூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சல்வாா்பட்டியைச் சோ்ந்த ஆடு வியாபாரி கருப்பசாமி (60). இவா் சாத்தூா் மேட்டமலை சாலையில் வெள்ளிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் ராஜபாளையத்திலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் குருசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.