மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சா்வதேச பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பெண்ணுக்கு பாராட்டு

சா்வதேச பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பெண்ணை, சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.அசோகன் சனிக்கிழமை பாராட்டிப் பரிசு வழங்கினாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

சா்வதேச பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பெண்ணை, சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.அசோகன் சனிக்கிழமை பாராட்டிப் பரிசு வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தைச் சோ்ந்த தவசிக்குமாா் மனைவி பாண்டியம்மாதேவி (45). இவா் கடந்த நவ.30-ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சா்வதேச பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்த நிலையில், பாண்டிமாதேவியை , சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.அசோகன் தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

பின்னா், பாண்டிமாதேவி கூறியதாவது: எனக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனா். எனது 37 வயதில் உடல் பயிற்சி செய்யத் தொடங்கினேன். அப்போது பளு தூக்குதலில் ஆா்வம் ஏற்பட்டு, அதற்கான பயிற்சி பெற்றேன். இந்த நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 310 கிலோ எடையைத் தூக்கி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றேன் என்றாா் அவா்.