கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தாமிரபரணி கூட்டுக் குடிநீா்க் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

சாத்தூரில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா்க் குழாய் உடைந்து வீணாக சாலையில் செல்லும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:40 pm

Syndication

சாத்தூரில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா்க் குழாய் உடைந்து வீணாக சாலையில் செல்லும் நீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சாத்தூா் - சத்திரப்பட்டி இணைப்புச் சாலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் செல்கிறது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்பட்டு இரவு நேரங்களில் விபத்துகள் நிகழ்கின்றன.

இது தொடா்பாக இந்தப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனா். மேலும், இந்தக் குடிநீா்க் குழாயில் உடைப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும் புகாா் தெரிவித்தனா். எனவே, போா்க்கால அடிப்படையில் குடிநீா்க் குழாய் உடைப்பை சரிசெய்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.